கிழக்கு மாகாண சுகாதார அமைச்சினால் 14 நியமனங்கள் வழங்கி வைப்பு

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல். முஹம்மட் நஸீர் அவர்களின் முயற்சியினால் 14 சுகாதார உத்தியோகத்தர்களுக்கான நியமனம் வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்று (03) கிழக்கு மாகாண சுகாதார அமைச்சில் இடம்பெற்றது.

கிழக்கு மாகாணத்தில் காணப்படும் சுகாதார வெற்றிடங்களை நிரப்புவதற்காக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சினால் மத்திய சுகாதார அமைச்சிற்கு சமர்பிக்கப்பட்ட திட்டத்தை தொடர்ந்து மத்தியரசினால் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சரினால் கோரப்பட்ட 
சில வெற்றிடங்களை நிரப்புவதற்காக அனுமதி வழங்கப்பட்டதை தொடர்ந்து இந்நியமனங்கள் வழங்கி வைப்பட்டது.

இதில் பாடசாலை பற்சிகிச்சையாளர் 05 பேரும், இயன்மருத்துவர் 04 பேரும், கதிரியக்க இயக்குனர் 01வரும், மருந்தாளர் 02 பேரும், மருந்து கலவையாளர் 02 பேருக்குமான நியமனம் வழங்கி வைகப்பட்டது.

போட்டி பரீட்சை மூலம் வழங்கப்பட்ட இந்நியமனம் மூன்று மாவட்டங்களிலும் வழங்கப்பட்டதுடன் இவர்கள் வெற்றிடங்கள் உள்ள வைத்தியசாலைகளுக்காமன பதவிகளுடன் மேலதிக பொறுப்புக்களும் வழங்கப்பட்டுள்ளதாகவும் இன்னும் பல வெற்றிடங்கள் மிக விரைவில் பூர்த்தி செய்வதற்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல். முஹமம்ட் நஸீர் தெரிவித்தார்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -