ஐயனார் விளையாட்டுக்கழக ஏற்பாட்டில் 28வது வீர மக்கள் தின நிகழ்வுகள் .! (படங்கள் )



புளொட் அமைப்பின் 28வது வீர மக்கள் தின நிகழ்வுகள் இன்று [16.07.2017] காலை 8.00 மணியளவில் வவுனியா, தாண்டிக்குளம் ஐயனார் விளையாட்டுக்கழகத்தில் திருநாவற்குளம் இளைஞர் கழகம் மற்றும் ஐயனார் விளையாட்டுக்கழகத்தின் ஒழுங்கமைப்பில் கழகத்தின் தலைவர் அனோஜன் தலைமையில் அஞ்சலி நிகழ்வுகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன

ஆரம்ப நிகழ்வாக ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் உப தலைவர்களில் ஒருவரும் முன்னாள் உப நகர பிதாவுமாகிய திரு க.சந்திரகுலசிங்கம்(மோகன்) அவர்களினால் கழகத்தின் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டு, அங்கு வைக்கப்பட்டிருந்த அமரர் தோழர் க.உமாமகேஸ்வரன் அவர்களின் உருவப்படத்திற்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

இந் நிகழ்வில் கழகத்தின் தலைவர்கள், உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -