மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் இருந்து- 4000 பேர் வேலை இழக்கும் அபாயம்





அமெரிக்காவை தலைமை இடமாக கொண்டு செயல்படும் ‘மைக்ரோசாப்ட்’ நிறுவனம் கணினி வன்பொருள் மற்றும் மென்பொருள் உற்பத்தியில் மிகவும் பிரசித்தி பெற்ற நிறுவனமாகும். இதுதவிர தகவல் தொழல்நுட்பம் சார்ந்த பல்வேறு துணை தொழல்களையும் இந்நிறுவனம் நடத்தி வருகிறது.

இந்நிறுவனத்தில் சுமார் 1,92,000 பணியாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இவர்களில் 71,000 பேர் அமெரிக்காவிலும், 1,21,000 பேர் மற்ற நாடுகளிலும் பணியாற்றுகின்றனர். இந்த நிலையில், இந்நிறுவனத்தின் விற்பனை மற்றும் மார்க்கெட்டிங் பிரிவில் வாடிக்கையாளர் மற்றும் பங்குதாரர்கள் சேவையை மேம்படுத்துவதகாக சில மாற்றங்கள் மேற்கொள்ளபட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதுகுறித்து அமெரிக்க நாளிதழ் வெளியிட்ட அறிக்கையில் இந்தியாவில் பிறந்த சத்யா நாதெல்லா தலைமையிலான தொழில் நுட்ப நிறுவனம் சுமார் 3,000 முதல் 4,000 பணியாளர்களை குறைக்க திட்டமிட்டிருப்பதாக கூறியுள்ளது. இதில் அமெரிக்காவிற்கு வெளியே வேலை செய்பவர்களே அதிகமாக வேலை இழக்க உள்ளனர் எனவும் குறிப்பிட்டுள்ளது. இந்த தகவல் மைக்ரோடாப்ர்ட் நிறுவனத்துடன் நெருங்கிய தொடர்புடைய ஒருவரால் கூறப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.

இந்த ஆள்குறைப்பு நடவடிக்கையால் வெளிநாடுகளில் இருந்து மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு வேலை செய்து வருபவர்கள் வேலை இழக்க அதிக வாய்ப்புள்ளது. குறிப்பாக, இந்தியாவை சேர்ந்தவர்களே அதிக அளவில் வேலை இழக்க வாய்ப்பு உள்ளதாக அஞ்சப்படுகிறது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -