திருகோணமலை மாவட்டத்திற்கு அடுத்த 5 ஆண்டுகளுக்கான அபிவிருத்தி திட்டம் தயாரிக்கும் பணிகள்

அப்துல்சலாம் யாசீம்-


திருகோணமலை மாவட்டத்திற்கு அடுத்த 5 ஆண்டுகளுக்கான அபிவிருத்தி திட்டம் தயாரிக்கும் பணிகள் முன்னெடுக்கப் பட்டு வருகின்றன.

நாட்டில் நடைமுறையிலுள்ள அபிவிருத்தி தொடர்பான கொள்கைகளை உள்ளடக்கியதாக இந்தத் திட்டம் தயாரிக்கப் படவுள்ளது.

இதற்காக துறை சார்ந்தோரின் ஒத்துழைப்புகள் பெறப் பட்டுள்ளன.தற்போது துறை ரீதியான நோக்கம், இலக்குகள் தயாரிக்கும் பணிகள் அந்தந்த துறை சார்ந்தோரின் பங்கெடுப்புடன் நடைபெற்று வருகின்றன. அத்தோடு அத்துறையில் காணப் படும் பிரச்சினைகள் அடையாளம் காணப் பட்டு அதனை நிவர்த்திப்பதற்கான வழிவகைகளை அடையாளம் காணும் பணிகளும் முன்னெடுக்கப் படுகின்றன.

அரசாங்க அதிபர் என்.ஏ.ஏ.புஸ்பகுமாராவின் வழிகாட்டலில் திட்டமிடல் பணிப்பாளர் திருமதி குகவதனி பரமேஸ்வரன் இதன் ஒருங்கிணைப்பு பணிகளை முன்னெடுத்து வருகின்றார்.

ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டம் இதற்கான அனுசரணையை வழங்கியுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -