சுதந்திரக்கட்சி விலகாது....

தேசிய அர­சாங்­கத்தில் இருந்து ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் எவரும் வெளியில் செல்­லப்­போ­வ­தில்லை. அத்­துடன் தேசிய அர­சாங்­கத்தில் இருப்­பதா இல்­லையா என்பதை டிசம்பர் மாதத்தில் உத்­தி­யோ­க­பூர்­வ­மாக அறி­விப்போம் என ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் செய­லா­ளரும் அமைச்­ச­ரு­மான துமிந்த திஸா­நா­யக்க தெரி­வித்தார்.

ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி தலை­மை­ய­கத்தில் நேற்று இடம்­பெற்ற செய்­தி­யாளர் சந்­திப்பில் கலந்­து­கொண்டு கருத்து தெரி­விக்­கை­யி­லேயே அவர் இவ்­வாறு தெரி­வித்தார்.

அவர் அங்கு தொடர்ந்தும் கூறு­கையில்,

கட்­சி­க­ளுக்குள் பிரச்­சினை ஏற்­ப­டு­வது சாதா­ர­ண­ வி­டயம். அனைத்து கட்­சி­க­ளிலும் பிரச்­சி­னைகள் இருக்­கின்­றன. அதே­போன்று எமது கட்­சிக்குள் இருக்கும் உள்­வி­வ­கார பிரச்­சி­னை­களை பேசித்­தீர்த்­துக்­கொள்­ளலாம்.அதனால் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியில் இருக்கும் நாங்கள் அவ­ச­ரப்­பட்டு தீர்­மானம் எடுக்கும் நிலையில் இல்லை. இது அதற்­கு­ரிய காலமும் அல்ல.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -