ரெளஷான் -
இறக்காமம் 1ம் கிராம சேவகர் பிரிவில் வசிக்கு சிவில் பாதுகாப்பு படை உத்தியோகத்தர் எஸ்.ரி.எம்.நியாஸ் தனது மேல் அதிகாரியினால் அனீதி இளைக்கப்பட்டுள்ளதாக கூறி சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்.மேலும் 30 வருடங்களாக இடம் பெற்ற யுத்ததில் 17 வருடங்களாக யுத்தம் புரிந்து நாட்டை காப்பாற்றிய எனக்கு இந்த அநீதி இளைக்கப்பட்டுள்ளது.
திடீர் சுகவீனமுற்று அம்பார பொது வைத்தியசாலையில் சிகிச்சை பேற்றிருந்தேன் பின்னர் வேலைக்கு சமூகமளிக்காத காரணத்தால் தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளதாக கடிதம் அனுப்பப்பட்டிருந்தது மீண்டும் தவறுதலாக இடம் பெற்றுள்ளதாகவும் இங்கினியாகலையில் கையொப்பத்தை இடுமாறும் பணிக்கப்பட்டது. காலை முதல் மாலை வரை வேலை செய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டது. இவருடைய இந்த செயற்பாடானது என்னை பழிவாங்குகின்றதாகவே அமைகின்றது.
யுத்ததினால் பாதிக்கப்பட்டு அங்கவீனர் ஆன என்னை வைத்திய நிபுனர்களால் 4 மணித்தியாலங்களுக் மேல் பணியில் ஈடுபடாக்கூடாது என்ற வைத்திய அறிக்கையும் உள்ளது.
இவ்வாறு இருந்தும் இந்த நல்லாட்சியில் இவ்வாறான உயர் அதிகாரிகள் இருப்பதை இட்டும் வேதனையடைகின்றேன் என்று கூறினார்.