
யு.எல்.எம்.றியாஸ் -
சம்மாந்துறை தொகுதி ஐக்கிய தேசியக் கடசியின் பிரதம அமைப்பாளர் எம்.ஏ.ஹசன் அலியின் முயற்சியின் பயனாக சம்மாந்துறை பிரதேச சபை எல்லைக்குட்பட்ட உள்ளக வீதிகள் அபிவிருத்தி செய்யப்பட உள்ளது
இதெற்கையென நெடுஞசாலைகள் மற்றும் உயர்கல்வி அமைச்சு சுமார் 30 மில்லியன் ரூபாய் நிதியினை வழங்கியுள்ளது .
இவ் நிதியுதவியுடன் 12 வீதிகள் கல்வீதிகளாக அபிவிருத்தி செய்யப்பட உள்ளது, இதன் முதற்கடட அபிவிருத்திப் பணியாக 3 வீதிகளை கல்வீதிகளாக அபிவிருத்தி செய்யும் ஆரம்ப விழா நேற்று இடம்பெற்றது.
இவ் விழாவில் சம்மாந்துறை தொகுதி ஐக்கிய தேசியக் கடசியின் பிரதம அமைப்பாளர் எம்.ஏ.ஹசன் அலி பிரதம அதிதியாக கலந்துகொண்டு அபிவிருத்திப் பணியினை ஆரம்பித்து வைத்தார்.
இவ் வைபவத்தில் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் நிறைவேற்று பொறியியலாளர் வரதன்,சம்மாந்துறை பிரதேச சபையின் செயலாளர் எம்.எல். சலீம் உள்ளிடட பலர் கலந்துகொண்டனர்.