திருமணம் முடித்து நீண்டகாலத்தின் பின் குழந்தை பாக்கியம் கிடைத்த தாய் மகிழ்ச்சியில் உயிரிழந்த சம்பவம்.



நசீர் ஹாஜி-

திருமணத்தின் பின் நீண்ட இடைவெளியின் பின்னர் குழந்தை பாக்கியம் கிடைத்த தாய் ஒருவர், மகிழ்ச்சி தாங்கிக்கொள்ள முடியாது மாரடைப்பினால் மரணமடைந்துள்ளார்.

திருமணம் முடிந்து சில ஆண்டுகளின் பின்னர் முதல் குழந்தையை ஈன்றெடுத்த தாய் ஒருவர், சிசுவைப் பார்த்து அந்த சந்தோசத்தை தாங்கிக்கொள்ள முடியாது மரணித்துள்ளார்.

தம்புத்தேகம வைத்தியசாலையில் நேற்று முன்தினம் இந்த துரதிஸ்டவசமான சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதய நாளங்கள் வெடித்து குறித்த பெண் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தம்புத்தேகம தெல்ஹிரிய என்னும் இடத்தைச் சேர்ந்த 31 வயதான தினுசிகா சந்தமாலி என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவ்வாறான மரணங்கள் ஆயிரக்கணக்கானோரில் ஒரு மரணமே சம்பவிக்கும் என சட்ட வைத்திய அதிகாரி டாக்டர் எச்.பீ. கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.

குழந்தை ஈன்றெடுத்த போது தாய் ஆரோக்கியமாக இருந்தார் என தம்புத்தேகம வைத்தியசாலை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -