அட்டாளைச்சேனையில் கலை, கலாசார, கவி விழா -படங்கள்






எம்.ஜே.எம்.சஜீத்- 

புனித நோன்புப் பெருநாளை முன்னிட்டு அட்டாளைச்சேனை அல்-இபாதா கலாசார மன்றத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற ”புதுசுகளாகும் பழசுகள்” கலை, கலாசார, கவின் விழா சனிக்கிழமை (08) மாலை அட்டாளைச்சேனை றகுமானழயாபாத் கடற்கரைப் பூங்கா வளாகத்தில் நடைபெற்றது.

விழா கிழக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவரும், அம்பாரை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவருமான எம்.எஸ்.உதுமாலெப்பை தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் திருகோணமலை மாவட்ட நீதிமன்ற நீதிவான் அல்-ஹாபில் என்.எம். அப்துல்லாஹ் பிரதம அதிதியாகவும், கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் திருமதி சிவப்பிரியா விஸ்வரத்தினம் கௌரவ அதிதியாகவும், பிரதேச செயலாளர்கள், கலாசாரா உத்தியோகத்தர்கள், உலமாக்கள் மற்றும் கல்வியியலாளர்கள் என பலர் சிறப்பு அதிதிகளாக கலந்து சிறப்பித்தனர்.

இதன்போது அல்-இபாதா கலாசார மன்றத்தினால் நடாத்தப்பட்ட பாரம்பரிய கலாசார விளையாட்டுப் போட்டி மற்றும் கலாசார போட்டி நிகழ்ச்சிகளில் வெற்றி பெற்று முதலிடங்களைப் பெற்றவர்களின் நிகழ்ச்சிகள் அரங்கேற்றப்பட்டதுடன், வெற்றிபெற்றவர்களுக்கு சான்றுதழ்களும், பரிசுகளும் வழங்கி கௌரவிக்கப்பட்டது. அத்துடன் இலக்கியத்துறையில் சாதனைபடைத்து அட்டாளைச்சேனை பிரதேசத்திற்கு பெருமை சேர்த்த முதுசங்களான ஆசுகவி அன்புடீன், மற்றும் பாலமுனை பாறூக் ஆகியோரும் இந்நிகழ்வில் கௌரவிக்கப்பட்டனர்.

இவ்வரலாற்று முக்கியத்துவமிக்க இக்கலாசார நிகழ்வில் கலந்துகொண்ட அதிதிகளுக்கும் இதன்போது அல்-இபாதா கலாசார மன்றத்தினால் ஞாபகச் சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன் அல்-இபாதா கலாசார மன்றத்தின் உறுப்பினர்களும் இதன்போது கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -