கிண்ணியா பொலிஸ் தலைமையில் மென்பந்து கிரிக்கட் சுற்றுப்போட்டி

ஹஸ்பர் ஏ ஹலீம்-

கிண்ணியா பொலிஸ் நிலையத்தினால் அணிக்கு அறுவர் கொண்ட மென்பந்து கிரிக்கட் சுற்றுப்போட்டியொன்றை சமுதாயப் பொலிஸ் பிரிவினால் கிண்ணியா பிரதேச செயலகத்துக்குட்பட்ட 29 கிராமசேவகர் பிரிவை உள்ளடக்கியதாக நடாத்தப்படவிருப்பதாக மக்கள் பொலிஸ் குழு பொறுப்பதிகாரியும் உப பொலிஸ் பரிசோதகருமாகிய (எஸ்.ஐ) புரோஜன் பாலச்சந்திரன் தெரிவித்தார்.

கிண்ணியா பிரதேச செயலகப் பிரிவில் வசிக்கும் கிராம சேவகர்களின் அனுமதிக் கடிதத்துடன் தங்களுடைய அணிகளின் விபரங்களை குறிப்பிட்டு இம்மாதம் 30 ம் திகதிக்கு முன்னர் கிண்ணியா பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்குமாறு பொலிஸ் குழுவின் மக்கள் குழு பொறுப்பதிகாரி புரோஜன் பாலச்சந்திரன் மேலும் கேட்டுள்ளார். மேலதிக தகவல்களுக்கு 0778951626 எனும் இலக்கத்துடன் தொடர்பு கொள்ளவும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -