கிண்ணியா பொலிஸ் நிலையத்தினால் அணிக்கு அறுவர் கொண்ட மென்பந்து கிரிக்கட் சுற்றுப்போட்டியொன்றை சமுதாயப் பொலிஸ் பிரிவினால் கிண்ணியா பிரதேச செயலகத்துக்குட்பட்ட 29 கிராமசேவகர் பிரிவை உள்ளடக்கியதாக நடாத்தப்படவிருப்பதாக மக்கள் பொலிஸ் குழு பொறுப்பதிகாரியும் உப பொலிஸ் பரிசோதகருமாகிய (எஸ்.ஐ) புரோஜன் பாலச்சந்திரன் தெரிவித்தார்.
கிண்ணியா பிரதேச செயலகப் பிரிவில் வசிக்கும் கிராம சேவகர்களின் அனுமதிக் கடிதத்துடன் தங்களுடைய அணிகளின் விபரங்களை குறிப்பிட்டு இம்மாதம் 30 ம் திகதிக்கு முன்னர் கிண்ணியா பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்குமாறு பொலிஸ் குழுவின் மக்கள் குழு பொறுப்பதிகாரி புரோஜன் பாலச்சந்திரன் மேலும் கேட்டுள்ளார். மேலதிக தகவல்களுக்கு 0778951626 எனும் இலக்கத்துடன் தொடர்பு கொள்ளவும்.