திருகோணமலையில் தொடர்ந்தும் நான்கு நாட்களுக்கு நீர் வெட்டு..!

ஹஸ்பர் ஏ ஹலீம்-
திருகோணமலை மாவட்ட கந்தளாய் பகுதியில் பிரதான நீர் சேவை தடங்களில் ஏற்பட்ட தவிர்க்க முடியாத காரணத்தினால் நீர் வெட்டு ஏற்படுத்தப்படவிருப்பதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை திருகோணமலை பிராந்திய காரியாலயத்தின் மாவட்ட பொறியியலாளர் வீ.சதீஸ் தெரிவித்தார். இவ் நீர் வெட்டு கந்தளாய், தம்பலகாமம், கிண்ணியா, திருகோணமலை நகர பகுதிகளை உள்ளடக்கிய பகுதிகளில் எதிர்வரும் 01.08.2017 தொடக்கம் 04.08.2017 வரை அமுலில் நீர் வெட்டு செய்யப்படும் என தெரிவித்தார். 

எனவே பொது மக்கள் தங்களுக்கு தேவையான நீரினை சேமித்து வைக்குமாறு மேலும் மக்களை தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் மாவட்ட பொறியியலாளர் வீ.சதீஸ் கேட்டுள்ளார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -