கசிப்பு வடித்த இருவர் கைது

அப்துல்சலாம் யாசீம்-

தி
ருகோணமலை-யான் ஓயாவை அண்மித்த பம்புறுகஸ்வெவ காட்டுப்பகுதியில் சட்ட விரோதமான முறையில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டு வந்த இரண்டு பேரை இன்று (02) அதிகாலை கைது செய்துள்ளதாக கோமரங்கடவெல பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் கோமரங்கடவெல-பம்புறுகஸ்வெவ பகுதியைச்சேர்ந்த எஸ்.டபிள்யூ.டி.பியவர்தன (26வயது) எஸ்.எஸ்.குணவர்தன (47வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சந்தேகநபர்கள் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டு வருவதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து சுற்றிவளைப்பை மேற்கொண்ட பொலிஸார் கசிப்பு 18750 மில்லி லீட்டர்-பெரல் 01- கரல் கம்பிகளுடன் இரண்டு பேரை கைது செய்ததாகவும் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட இருவரையும் நாளைய தினம் திங்கக்கிழமை திருகோணமலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் கோமரங்கடவெல பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -