திருகோணமலை-யான் ஓயாவை அண்மித்த பம்புறுகஸ்வெவ காட்டுப்பகுதியில் சட்ட விரோதமான முறையில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டு வந்த இரண்டு பேரை இன்று (02) அதிகாலை கைது செய்துள்ளதாக கோமரங்கடவெல பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் கோமரங்கடவெல-பம்புறுகஸ்வெவ பகுதியைச்சேர்ந்த எஸ்.டபிள்யூ.டி.பியவர்தன (26வயது) எஸ்.எஸ்.குணவர்தன (47வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சந்தேகநபர்கள் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டு வருவதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து சுற்றிவளைப்பை மேற்கொண்ட பொலிஸார் கசிப்பு 18750 மில்லி லீட்டர்-பெரல் 01- கரல் கம்பிகளுடன் இரண்டு பேரை கைது செய்ததாகவும் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட இருவரையும் நாளைய தினம் திங்கக்கிழமை திருகோணமலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் கோமரங்கடவெல பொலிஸார் தெரிவித்தனர்.