வை. எல். எஸ். ஹமீட்டிற்கு வெள்ளவத்தையில் இரண்டு மாடி பங்களா : பூமுதீன் பரபரப்பு சாட்சியம்


அஹமட் ஜஹான் -

வை. எல். எஸ். ஹமீட்டிற்கு வெள்ளவத்தையில் இரண்டு மாடி பங்களா இருப்பதாகவும் அது மர்ஹும் அஷ்ரப்புடன் இருந்த போது அவரிடம் கொள்ளையடித்த பணத்தில் கட்டினீர்களா? அல்லது றிசாட்டுடன் இருந்தபோது- அவரிடம் கொள்ளையடித்ததில் கட்டினீர்களா? என்ற கருப்பொருளில் கதை, திரைக்கதை, வசனம் என்பவற்றுடன் ஓர் நாடகம் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் அரங்கேற்றப் பட்டது.

அதற்கான திரைக்கதை விமர்சனம் இது

விடயத்திற்குள் செல்லமுன் நமது கதாநாயகன் மற்றும் கதாநாயகனின் எடுபிடி தொடர்பாக ஒரு சிறிய அறிமுகமும் சில கேள்விகளும்.

நமது கதாநாயகன் தேர்தல்காலத்திலும் அதன் பின்பும் குடிகாரர்களைச் சேர்த்துக்கொள்ள மாட்டேன் என்று பேசியவர், பேசிக்கொண்டிருப்பவர். அவரது இந்த எடுபிடி ஊரறிந்த ஒரு முடாக் குடிகாரன் என்பதும் நமது கதாநாயகனின் கூலி எழுத்தாளர் என்பதும் எல்லோருக்கும் தெரியும். குடிகாரர்களைச் சேர்த்துக்கொள்ள மாட்டேன் என்று பகிரங்க வாக்குறுதி அளித்து குடிகாரனை கூட வைத்திருப்பது வாக்குமாறுவதில்லையா? வாக்கு மாறுவது நயவஞ்சகத்தின் அடையாளமில்லையா?

சம்மாந்துறையில் வைத்து மு காவை விட ஒரு ஆசனமேனும் குறைவாக எடுத்தால் தலைமைப் பதவியை ராஜினாமா செய்வேன் என்றவர் ராஜினாமா செய்தாரா? அது வாக்கு மீறலில்லையா? அவ்வாறு வாக்கு மாறுவது நயவஞ்சகத்தின் அடையாளமில்லையா?

நமது கதாநாயகனின் வாக்குமீறல் பட்டியல் நீண்டு கொண்டே செல்லும். இவ்வாறு நயவஞ்சகத்தனத்தின் வெளிப்பாடான வாக்குமீறல்களைச் செய்பவர் ஒரு சமூகத்தின் தலைவராக முடியுமா? அவரை யாராவது தலைவராக ஏற்றுக்கொண்டால் இஸ்லாத்தின் பார்வையில் அவர் நயவஞ்சகத்தை அனுமதித்தவர் ஆகமாட்டாரா?

முஸ்லிம் சமூகம் நயவஞ்சகத்தை ஏற்றுக்கொண்டு இஸ்லாத்திற்கு மாறு செய்கின்ற சமூகமா?

இந்த எடுபிடி அவரது ரகசியத்தை வெளியிடுவேன், இவருடைய ரகசியத்தை வெளியிடுவேன் என்று அடிக்கடி முகநூலில் பயமுறுத்துவதும் பின்னர் அவரை உரிய முறையில் சந்தோசப் படுத்தியதும் அந்தப் பதிவைத் தூக்குவதும், அதற்குள் நமது கதாநாயகனும் மாட்டித் தவிப்பதும்-அப்படியொரு மானங்கெட்ட பொளப்பு, நம்ம எடுபிடிக்கு. அதைப்பற்றி இன்னொரு சந்தர்ப்பத்தில் பேசுவோம் மகாஜனங்களே. ( நமது கதாநாயகன் மாட்டித் தவிக்கும் விசயம் இருக்கிறதே- அது ரொம்ப ரொம்ப அசிங்கமானது, சாதரண மனிதர்களின் இயற்கை உணர்வுகளுக்கு மாற்றமானது - ரொம்ப ரொம்ப ஒழுக்கக் கேடானதும் அருவருப்பானதும்).

இஸ்லாத்தில் வெறுக்கப்பட்ட நயவஞ்சகத்தனத்தின் எதிரொலியும் முடாக்குடிகாரனும் சேர்ந்து நடித்த அந்த நாடகத்தின் விமர்சனங்களைக் இப்பொழுது கேளுங்கள்.

கருப்பொருள்: அஷ்ரப்பிடம் கொள்ளயடித்ததா? அல்லது றிசாட்டிடம் கொள்ளயடித்ததா?

முதலாவது நாமறிந்தவரையில் வை எல் எஸ் ஹமீட்டிற்கு வெள்ளவத்தையில் ஒரு றூம் கூட கிடையாது. ஆனாலும் ஒரு வாதத்திற்காக இரண்டுமாடியோ அல்லது ஐம்பது மாடியோ அவருக்கு இருக்கின்றது; என்று வைத்துக்கொள்வோமே. இவர்களின் கூற்றுப்படி அதற்குரிய பணம் அஷ்ரப்பிடமா அல்லது றிசாட்டிடமா கொள்ளயடிக்கப் பட்டது என்பது கேள்வி. இந்த இரண்டில் ஒன்று பதிலாக வழங்கப்பட வேண்டும்.

அஷ்ரப் என்பவர் ஒரு மாமனிதர். அவரின் பெயரைக்கூட உச்சரிப்பதற்கு இந்த நயவஞ்சகத்தின் எதிரொலிக்கோ அல்லது இந்த முடாக்குடிகார எடுபிடிக்கோ அருகதை இல்லை. அவர் 17 வருடங்களுக்குமுன் மரணித்தவர். அவரை விட்டுவிடுவோம். இருவரில் ஒருவரைக் குறிப்பிட்டால் சரிதானே. அதுதானே கேள்வி. எனவே அதற்குரிய பதிலாக றிசாட்டை எடுத்துக் கொள்வோம்.

இந்நாடகத்தில் பாவித்திருக்கின்ற சொற்றொடர் ' றிசாட்டிடம் " கொள்ளை" அடித்ததார், என்பதாகும். 'கொள்ளை' என்ற சொல் இரண்டு அர்த்தத்தில் பொதுவாக பாவிக்கப்படும். ஒன்று. நேரடியான கொள்ளை. பெரும்பாலும் ஆயுத முனையில் ஒருவரிடம் கொள்ளையிடுவது. இரண்டு, அரசியல் வாதிகள் பலவிதமான டீல்கள் மூலம் அரச பணத்தை அதாவது பொதுமக்கள் பணத்தைக் கொள்ளை இடுவது, இதற்கு மறுபெயர் ஊழல் என்பதாகும்.

இதில் எந்தக் கொள்ளையை பூமுதீன் குறிப்பிடுகின்றார் என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும்.

நம் ஆய்வுக்காக

முதலாவது வகையான கொள்ளையாக, அதாவது நேரடியான கொள்ளையாக இருந்தால், வை. எல். எஸ். ஹமீட் எங்கு, எப்பொழுது, யாருடன், என்ன ஆயுதத்துடன் வந்து எவ்வளவு கொள்ளையடித்தார். கொள்ளையடித்து வெள்ளைப் பணமா? கறுப்புப் பணமா? வெள்ளைப் பணமானால் ஏன் பொலிசில் முறையிடவில்லை. கொள்ளையிட்டதன் பின்பும் றிசாட்டுடன் இருந்தாரா? அவ்வாறானால் அது எப்படி ? போன்ற கேள்விகளுக்கு பூமுதீன் பதிலளிக்க வேண்டும். அது கறுப்புப் பணமென்பதால்தான் முறையிடவில்லை என்றால் அது எங்கே, எப்போது கொள்ளையடித்த பணம். அதிலிருந்து வை. எல். எஸ். எவ்வளவு கொள்ளையடித்தார். 

மிகுதிப் பணத்திற்கு என்ன நடந்தது. றிசாட் கொள்ளையடித்ததை அறிந்திருந்தும் இவ்வாறு பகிரங்கமாக வெளிப்படுத்த இதுவரை பிந்தியதேன். ஏன் றிசாட்டின் கொள்ளை தொடர்பாக பொலிசில் முறையிடவில்லை. அவ்வாறு முறையிடாமைக்கு காரணம் அவருக்கும் அதில் பங்கிருப்பதானாலா? வேறு யாராருக்குப் பங்கிருக்கின்றது அந்தக் கொள்ளையில் . இந்தத் தகவல்களை அவசரமாக பூமுதீன் வெளியிட வேண்டும்.

அது இரண்டாவது வகையான வகையான கொள்ளையாக இருந்தால் ( ஊழல் வகை) அதை இரண்டு வகைப்படுத்தலாம், ஒன்று ரிசாட்டுடன் சேர்ந்து ஊழல்செய்து கொள்ளையடித்தது அல்லது ரிசாட் கொள்ளையடித்ததன்பின் அதில் இருந்து கொள்ளையடித்தது. இதில் முதலாவது வகையாக இருக்க முடியாது ஏனெனில் பூமுதீன் ' றிசாட்டுடன் அல்லது அவருடன்' என்ற சொல்லைப் பாவிக்கவில்லை. மாறாக ' அவரிடம்' என்ற சொல்லையே பாவித்திருக்கின்றார். அதாவது றிசாட்டிடம் என்ற அர்த்தமாகும். அவ்வாறாயின் றிசாட் கொள்ளையடித்ததன்பின் றிசாட்டிடம் இருந்து கொள்ளையடித்தார், என்பதுதான் பொருளாகும்.

அப்படியென்றால் றிசாட் ஊழல் செய்து கொள்ளையடித்தார், என்று பூமுதீன் சாட்சி பகர்கின்றார்; என்பது தெளிவாகிறது. இப்பொழுது றிசாட் கொள்ளையடித்ததை உறுதிப்படுத்துகின்ற பூமுதீன் றிசாட் எதில் கொள்ளை அடித்தார்; என்பதையும் தெளிவுபடுத்த வேண்டும்.

அது ' அரிசி' ஊழலிலா?

அல்லது உப்பு ஊழலிலா?

அல்லது தும்பு ஊழலிலா?

அல்லது பித்தளை ஊழலிலா?

அல்லது போட்ட ரோட்டைக் காணோம், கட்டிய குளத்தைக் காணோம், என்ற ஊழலிலா?

அல்லது முஸ்லிம் நாடுகளில் ஏழை அகதிகளுக்கு வீடுகட்ட வந்த பணத்தில் பெருந்தொகை சுருட்டிய ஊழலிலா?

எந்த ஊழலில் என்பதைத் தெளிவு படுத்த வேண்டும்.

களவுக்கு சாட்சி சொல்பவருக்கு எங்கே களவெடுக்கப் பட்டது, என்பதைச் சொல்வதில் என்ன பிரச்சினை?

அத்தோடு இதுவரை ஏன் இந்த உண்மையை மறைத்தார். இதில் பூமுதீன் பெற்றுக்கொண்ட பங்கு என்ன?

தேயிலைத் தொழிற்சாலையும் இந்தப் பணத்தில் வாங்கியதா?

பௌத்தாலோக மாவத்தையில் பல கோடி ரூபாய் பெறுமதியான மாளிகையை றிசாட் கட்டியிருக்கின்றாரே, அதுவும் இந்த ஊழல் பணத்தில் கட்டியதுதானா?

தெகிவளை பொலிஸ் நிலையத்திற்கு அண்மையில் அவருக்கு ஒரு காணி இருக்கின்றதாக சொல்கிறார்களே? அதுவும் இந்தப் பணத்தில் வாங்கியதுதானா? கொழும்பில் வெள்ளவத்தை உட்பட ( Fredrica Road ) இன்னும் பல இடங்களில் சொத்துக்கள் வாங்கியிருப்பதாக சொல்லப் படுகின்றதே, அவையும் இந்த ஊழல் பணத்தில் வாங்கியதுதானா?

புத்தளம், தில்லையடி 'அம்மார்' ( அவரது மகனின் பெயராம்) கட்டப்பட்டிருக்கின்ற திருமண மண்டபமும் இந்த ஊழல் பணத்தில் கட்டப்பட்டதுதானா? மிக அண்மையில் புத்தளத்தில் இன்னுமொரு சொத்து வாங்கியதாக சொல்லப்படுகின்றதே, அதுவும் இந்தப் பணத்தில் வாங்கியதுதானா?

புத்தளத்தில் இவரது தாய் குடியிருக்கின்ற, இவர் புத்தளம் போகும்போது தங்குகின்ற அந்த பாரிய பங்களாவும் இந்தப் பணத்தில் கட்டியதுதானா?

அம்மாடியோவ், கைவலிக்குது. இதற்குமேலும் எழுத இயலாது, யாராவது வாங்க. மிகுதியைத் தொடர.

இவ்வளவும் வாங்கியதன்பின் வை எல் எஸ் கொள்ளயடிப்பதற்கு மிச்சமும் இருந்ததா? அப்பாடா, என்ன எமகாதக கொள்ளைக் காரண்டா இந்த றிசாட்.

சொப்பிங் பேக்குடன் வந்த றிசாட்டிற்கு இவ்வளவு சொத்தென்றால் ஹலாலக உழைத்தவர்களுக்கு சொத்து இருந்தால் கூட தப்பா?

முட்டை வியாபாரமும் அசோக் லேலண்டும் அடுத்த பதிவில்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -