தியவாட்வான் அறபா வித்தியாலயத்தில் மாணவர்களுக்கான வைத்திய பரிசோதனை



ஓட்டமாவடி அ.ச.முகம்மது சதீக்-


முட் மம தியவாட்வான் அறபா வித்தியாலயத்தில் மாணவர்களுக்கான பாடசாலை வைத்திய பரிசோதனை நேற்று பாடசாலையில் கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி ஜனாபா வாசிம் அவர்களின் தலைமையில் நடைபெற்றது

இதில் தரம் ஒன்று நான்கு ஏழு மற்றும் பத்து ஆகிய தரங்களிலுள்ள மாணவர்கள் வைத்திய பரிசோதனைக்குட்படுத்தப்பட்டனர் இதில் மாணவர்களின் போசாக்கு மற்றும உளவியல் ; உடலியல் நோய்கள் பற்சுகாதாரம் என்பன பரிசோதிக்கப்பட்டது.

மாணவர்களின் போசாக்கு மற்றும் நோய்கள் தொடர்பான மாணவர்கள் இனம் காணப்பட்டு அம்மாணவர்கள் விசேட கிளினிக்கான வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கும் மற்றும் மட்டக்களப்பு போதான வைத்தியசாலைக்கு செல்லுமாறு பரிந்துரைக்கப்பட்டு அவர்களுக்கான பாடசாலை சுகாதார மேல் பரிசோதனை அட்டை வழங்கப்பட்டது .இப்பாடசாலை வைத்திய பரிசோதனையின் போது இப்பிரதேச பொதுச் சுகாதார பரிசோதகர் ஏ நௌசாத் மற்றும் பாடசாலை பற்சிகிச்சையாளர் எஸ் பாத்திமா சபாயா ஆகியோரும் கலந்துகொண்டு தமது கடமைகளை மேற்கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -