சாய்ந்தமருதின் கலைக்குழுக்கள் தங்களது கலைநிகழ்வுகளால் சபையை மகிழ்வித்த “கலைகளின் சங்கமம் 2017” என்ற இனிமையான நிகழ்வு சாய்ந்தமருது பிரதேச செயலக கலாசார பிரிவின் ஏற்பாட்டில் 2017-07-21 ஆம் திகதியன்று கமு/றியாழுல் ஜன்னா வித்தியாலயத்தில் பிரதேச செயலாளர் ஐ.எல்.ஹனிபாவின் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக சட்டம் ஒழுங்கு மற்றும் தென்மாகாண அபிவிருத்தி அமைச்சின் மேலதிக செயலாளர் ஏ.எல்.எம்.சலீம் கலந்துகொண்டார். அதிதிகள் வரிசையில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் தொற்றுநோய் தடுப்புப்பிரிவின் தலைவர் வைத்திய கலாநிதி நாகூர் ஆரீப் மற்றும் சாய்ந்தமருது பலநோக்குக் கூட்டுறவுச்சங்கத்தின் தலைவர் எம்.எம்.உதுமாலெப்பை உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர்.
சாய்ந்தமருது பிரதேச செயலக கலாச்சார உத்தியோகத்தர் அகமட் அம்ஜத் மற்றும் கலாசார திணைக்களத்தின் அபிவிருத்தி உத்தியோகத்தர் வை.எம்.நௌஷானா ஆகியோரின் வழிநடத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வுகளில் மருதூர் கலைக்கூடல் மன்றம்.மருதூர் தக்வா கோலாட்டக்குழு,வென்னிலா இசைக்கலா மன்றம் மற்றும் தாறுல் இஸ்லாம் அத்த அவிய்யா கலாசார அமைப்பு போன்ற அமைப்புக்கள் கலந்துகொண்டு தங்களது கலைநிகழ்ச்சிகளை அரங்கேற்றின.
சாய்ந்தமருது பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் கலைமன்றன்களின் தலைவர்கள் கலைரசிகர்கள் என பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.