இலண்டனில் வேனுடன் எரிந்து போன இலங்கையர்-வீடியோ இணைப்பு

தென்மேற்குஇலண்டனிலுள்ள உள்ள ரொல்வேத் பகுதியில் A3 பிரதான போக்குவரத்துச் சாலையில் வேன் ஒன்று தீப்பற்றிக் கொண்டதில் அதனுள்ளேயிருந்த இலங்கையைச் சேர்ந்த நபர் ஒருவர் இறந்துள்ளார்.

கடந்த எட்டாம் திகதி இரவு 9 .45 மணியளவில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. ஆயினும், இவ் விபத்து எவ்வாறு ஏற்பட்டது என இதுவரை தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. இரு வாகனங்களில் சம்பவ இடத்திற்கு விரைந்த லண்டன் தீயணைப்பு படையின் பத்து தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்த போதும் வேனுக்குள் இருந்த நபரின் உயிரைக் காப்பாற்ற முடியாது போயிற்று.

மிகவும் துக்ககரமான இத் தீ விபத்தில் யாழ்ப்பாணம் அளவெட்டியை பிறப்பிடமாகவும் லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட நாகேஸ் என அழைக்கப்படும் நபரே இறந்துவிட்டிருக்கிறார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -