முன்னோக்கிச் சென்றுகொண்டிருந்த பஸ்ஸின் பின்புறத்துக்குள் வேகக் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் புகுந்து ஏற்பட்ட விபத்தில் இருவர் படுகாயமடைந்ததாக காத்தான்குடி போக்கு வரத்துப் பொலிஸார் தெரிவித்தனர்.
சனிக்கிழமை பிற்பகல் 01.07.2017 இடம்பெற்ற இச்சம்பவம் பற்றி மேலும் தெரிவித்த பொலிஸார் மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதி ஆரையம்பதியில் கல்முனை நோக்கிச் சென்றுகொண்டிருந்த இபோச பஸ்ஸின் பின்புறத்தில் அதே திசையில் அதிவேகமாகச் சென்ற மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து மோதியதில் மோட்டார் சைக்கிளில் சென்ற இருவரும் படுகாயமடைந்துள்ளனர்.
கல்முனையைச் சேர்ந்த அவ்விருவரும் உடனடியாக ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம்பற்றி காத்தான்குடிப் பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.