தேசிய திரைப்படக்கூட்டுத்தாபனம் மற்றும் அரச அச்சகக்கூட்டுத்தாபனத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்ட தலைவர்கள் உட்பட இயக்குனர் சபையின் உறுப்பினர்களுக்கு நியமனக் கடிதம் வழங்கும் நிகழ்வு அரசாங்க நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தலைமையில் நடைபெற்றது.
இதில் திரைப்படக்கூட்டுத்தாபனத்தின் தலைவராக நியமிக்கப்பட்ட சிதேந்திரா சேனாரத்ன அவர்கள் மற்றும் அச்சகக்கூட்டுத்தாபனத்தின் தலைவராக நியமிக்கப்பட்ட வைத்தியர் எல்.எல்.சந்திரசிறி அவர்கள் அமைச்சரின் கைகளினால் நியமனக்கடிதங்களைப் பெற்றுக்கொள்வதையும், இயக்குனர் சபையினரையும் படத்தல் காணலாம். அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறியும் காணப்படுகிறார்.