இலங்கை வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க, கட்டார் அமீர் அஷ் ஷேய்க் தமீம் பின் ஹமத் ஆல் தானி அவர்களை தலைநகர் தோஹாவில் சந்தித்தார். மேற்படி சந்திப்பின் போது, இருதரப்பு உறவுகள் குறித்தும் அவற்றை மேம்படுத்துவதற்கான வழிவகைகள் குறித்தும் ஆராயப் பட்டது.
அதேவேளை, பேச்சுவார்த்தைகள் மூலமே தற்போதைய வளைகுடா நெருக்கடிக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்ற இலங்கை அரசின் நிலைப்பாட்டையும் வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க எடுத்துக் கூறினார்.
மேற்படி விஜயத்தின் போது கட்டார் பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் ஷெய்க் அப்துல்லாஹ் பின் நாஸர் அல் தானி, வெளியுறவு அமைச்சர் ஷெய்க் முஹம்மத் பின் அப்துர்ரஹ்மான் அல்-தானி ஆகியோரையும் வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க சந்தித்தார்.
கட்டார் தூதரகம்,
கொழும்பு.