மாற்றுத் திறனாளி வாவியில் தவறி விழுந்து மரணம்

ஏ.எச்.ஏ. ஹுஸைன்-

றாவூர், பொலிஸ் பிரிவிலுள்ள சந்திவெளி வாவியில் மாற்றுத்திறனாளி ஒருவர் தவறி விழுந்து மரணித்து விட்டதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

வெள்ளிக்கிழமை காலை கண்டெடுக்கப்பட்ட சடலம் சந்திவெளியைச் சேர்ந்த செல்லத்தம்பி சித்திரவேல் (வயது 57) என்பவருடையது என ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

ஒரு காலும், ஒரு கையும் பலவீனமான இவர் மது அருந்திய நிலையில் வாவியோரமாக நடந்து செல்லும்போது தடுமாறி நீரில் விழுந்து மூச்சுத் திணறி மரணித்துள்ளார் என பிரேத பரிசோதனையின்போது தெரிவிக்கப்பட்டது.

வியாழக்கிழமை பின்னேரத்திலிருந்து காணாமல் போன இவர் உறவினர்களால் தேடப்பட்டு வந்த நிலையில் வாவியில் மீன்பிடிக்க சென்ற ஒருவர் சடலம் கிடப்பது பற்றி உறவினர்களுக்குத் தெரியப்படுத்தியதையடுத்து வெள்ளிக்கிழமை காலை சடலம் மீட்கப்பட்டது.

இச்சம்பவம்பற்றி ஏறாவூர் பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -