இலங்கையில் ஐ.எஸ்.தீவிரவாதத்தையும், முஸ்லிம் அடிப்படைவாதத்தையும் அடியோடு இல்லாமற் செய்வதற்கு முற்போக்கு சிந்தனைகளைக் கொண்ட முஸ்லிம்கள் பொதுபலசேனாவுடன் கைகோர்க்க வேண்டுமென அவ்வமைப்பு பகிரங்க வேண்டுகோள் விடுத்துள்ளது.
நடுநிலை வகிக்கும் சம்பிரதாய முஸ்லிம்கள், ஏனைய மக்களுடன் சமாதானமாக வாழவிரும்பும் முஸ்லிம்கள், புத்தர் சிலை மீது வெறுப்படையாத முஸ்லிம்கள் என நாட்டில் நிறையப்பேர் இருக்கிறார்கள். அவர்கள் எம்முடன் இணைந்து கொள்ளலாமெனவும் அழைப்பு விடுத்துள்ளது.
நாம் வேற்றுமைகளை மறந்து தாய்நாட்டின் நன்மைக்காகவும், பாதுகாப்பிற்காகவும் இணைந்து செயற்படுவதன் மூலம் இலங்கையில் சிங்கள, தமிழ் மற்றும் இஸ்லாமிய அடிப்படைவாதத்தைத் துடைத்தெறியலாம் என்றும் தெரிவித்துள்ளது.
ராஜகிரியவிலுள்ள பொதுபலசேனாவின் உத்தியோகபூர்வ காரியாலயத்தில் நேற்று மதியம் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய அவ்வமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி டிலன்த விதானகே இவ் அழைப்பினை விடுத்தார்.