கல்முனை - பாண்டிருப்பில் நற்பிட்டிமுனை அசன் ஹபீபுல்லாஹ் சடலமாக மீட்பு..!

ஏ.எல்.எம்.ஷினாஸ்-
ல்முனை - பாண்டிருப் பெரிய குளத்தில் நீரில் மூழ்கிய நிலையில் இன்று (14) ஒருவர் சடலமாக மீட்கப்பட்டார். சடலமாக மீட்கப்பட்டவர் நற்பிட்டிமுனை - 01 ஐ சேர்ந்த அசன் ஹபீபுல்லாஹ் (வயது-43) என அடையாளம் காணப்பட்டுள்ளாா்.

மூன்று பிள்ளைகளின் தந்தையான அசன் ஹபீபுல்லாஹ் (13.07.2017) மாலை 8.00 மணியளவில் காணாமல் போனதையடுத்து உறவினர்கள் தேட ஆரம்பித்தனா். இன்னிலையில் சடலம் குறித்த இடத்தில் நீரில் மூழ்கிய நிலையில் கிடப்பதை அடையாளம் கண்டனா்.

ஸ்தலத்திற்கு வருகைதந்த கல்முனை மாவட்டநீதிபதி ஐ.பி.பாயிஸ் றஸாக் சடலத்தை பார்வையிட்டதுடன் சடலம் பிரேத பரிசோதைனைக்காக கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. இந்தச் சம்பவம் தொடா்பான மேலதிக விசாரணைகளை கல்முனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனா்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -