திருகோணமலை - இறக்கண்டி வாலையூற்று களப்பு பகுதி காணிப் பிரட்சனைக்குத் தீர்வு..!

ஊடகப்பிரிவு-
திருகோணமலை இறக்கண்டி வாலையூற்று களப்பு பகுதியின் 133 ஏக்கர் காணியில் நிலவி வந்த காணிப்பிரட்சனைக்கு தீர்வை பெற்றுக்கொடுக்க கடந்த வியாழக்கிழமை அப்பகுதிக்கு பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் நேரடி விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.

இப்பகுதியில் 30 வருடங்களுக்கு அதிகமாக மக்கள் குடியிருந்து வரும் 133 ஏக்கர் காணியை வெளிநாட்டு பிரஜை ஒருவர் உரிமை கூறி அப்பகுதியை இயந்திரங்களை கொண்டு துப்பரவாக்கியதன் பின்னரே இந்த சர்ச்சை ஏற்பட்டிருந்தது.

இதன்போது சர்ச்சைக்குரிய காணியின் உறுதிப்பத்திரம் (89ஏக்கர்) வைத்திருப்பவர்களுக்கு காணி உறுதியின் பிரகாரம் காணியை வழங்குவதென்றும் மிகுதி காணியின் ஒரு பகுதியில் வீட்டு திட்டம் ஒன்று அமைக்கவும்இ மற்றைய பகுதியை இப்பகுதியில் 30 வருடங்களாக குடியிருந்த மக்களுக்கு பகிர்ந்தளிப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டது.

இவ்விஜயத்தில் குசெவெளி பிரதேச செயலாளர் தனேஸ்வரன் இகாணி உத்தியோகத்தர் இபிரதேச பொலிஸ் உயர் அதிகாரிகள் உட்பட பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -