விபத்தில் இரண்டு சாரதிகளும் படுகாயம்



அப்துல்சலாம் யாசீம்-

திருகோணமலை-ஹொரவ்பொத்தானை பிரதான வீதி மரதங்கடவெல பகுதியில் சிறிய உழவு இயந்திரத்துடன் டிப்பர் வாகனம் இன்று (22) காலை 6.30மணியளவில் மோதி விபத்துக்குள்ளானதில் இரண்டு சாரதிகளும் படுகாயமடைந்த நிலையில் ஹொரவ்பொத்தானை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மரதங்கடவெல பகுதியிலிருந்து ஹொரவ்பொத்தானைக்கு சிறிய உழவு இயந்திரத்தில் ஹோட்டலொன்றிற்கு விறகுகளை ஏற்றிச்சென்ற போது பின்புறமாக மணல் ஏற்றி வந்த டிப்பர் வாகனம் மோதியதினாலேயே இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சிறிய உழவு இயந்திரத்தின் சாரதியான ஹொரவ்பொத்தானை-மரதங்கடவெல பகுதியைச்சேர்ந்த மல்ஹாமிகே ஜெயசிங்க (55வயது) படுகாயங்களுக்குள்ளான நிலையில் ஹொரவ்பொத்தானை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக வைத்திசாலை அதிகாரியொருவர் தெரிவித்தார்.

இதேவேளை டிப்பர் லொறியின் சாரதியான ஹலாவத்த-குமாரகட்டுவ பகுதியைச்சேர்ந்த டபிள்யூ.டி.என்.ருவன் அனுராத (27வயது) ஹொரவ்பொத்தானை பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரியவருகின்றது.

குறித்த விபத்தினால் இரு பகுதிகளுக்கும் வாகனம் செல்ல மிடியாத நிலை காணப்பட்டதுடன் விபத்துக்குள்ளான லொறியை அகற்றும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.
விபத்து தொடர்பாக ஹொரவ்பொத்தானை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -