மகளின் காதலனுடன் வீட்டைவிட்டு சென்ற தாய் - இலங்கையில் சம்பவம்

தனது குழந்தை மற்றும் கணவனை கைவிட்டு, தனது மகளின் காதலனுடன் வீட்டைவிட்டுச் சென்ற பெண் தொடர்பான சம்பவம்,அம்பலாந்தோட்டை பிரதேசத்தில் பதிவாகியுள்ளது. குறித்த தாயின் 17 வயது மகள், அவரது மேலதிக வகுப்பில் அதே வயதை கொண்ட சிறுவனுடன் காதல் தொடர்பை பேணி வந்துள்ளார்.

இவர்களின் காதலுக்கு பெண்ணின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவிக்காத நிலையில், சுதந்திரமாக இருவரும் காதலித்து வந்துள்ளனர். இவர்கள் இருவரும் ஒரே மேலதிக வகுப்புக்கு சமூகமளித்து வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் நேற்றைய தினம், தனது காதலனின் வரவை எதிர்பார்த்து காத்திருந்த சிறுமி, நீண்ட நேரமாகியும் தனது காதலன் வராததையடுத்து, தனது வீட்டுக்கு திரும்பியுள்ளார்.

இதன்போது, தனது தாய் வீட்டில் இல்லையென சிறுமிக்கு தெரியவந்துள்ளது. பின்னர், தனது காதலனுடன் தாய் வீட்டைவிட்டுச் சென்றுள்ளதை அறிந்துகொண்டுள்ளார். இவ்வாறு மகளின் காதலனுடன் வீட்டைவிட்டு சென்ற தாய்க்கு 35 வயது எனவும், வீட்டிலிருந்த பணத்தையும் அவர் எடுத்து சென்றுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -