புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ்வின் 2017ஆம் ஆண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதியொதுக்கீட்டின் மூலம் கொள்வனவு செய்யப்பட்ட பொருட்களை காத்தான்குடி பிரதேசசெயலாளர் பிரிவுக்குட்பட்ட நிறுவனங்களுக்கு பகிர்ந்தளிக்கும் நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை (14) காத்தான்குடி பிரதேசசெயலகத்தில் இடம்பெற்றது.
காத்தான்குடி பிரதேச செயலக பிரதேச செயலாளர் எஸ்.எச்.முஸம்மில் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் பிரதம அதிதியாக கலந்துகொண்டு பொருட்களை கையளித்தார்.
இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாவின் நிதி ஒதுக்கீட்டில் கொள்வனவு செய்யப்பட்ட இப்பொருட்கள் காத்தான்குடி பிரதேசத்திலுள்ள கழகங்கள், சங்கங்கள், பாலர் பாடசாலைகள், மதரசாக்கள் என 15 பொது நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.