பிராந்திய ஊடகவியலாளர்களுக்கும் சிறப்பு அடையாள அட்டைகள்..!

மினுவாங்கொடை நிருபர்-
லுவலக மற்றும் பிராந்திய ஊடகவியலாளர்களுக்கு ஒரே தரத்தில் அமைந்த கெளரவமான ஊடக அடையாள அட்டை ஒன்றை அறிமுகப்படுத்த, நிதி மற்றும் ஊடக அமைச்சு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தற்போது, அலுவலக ஊடகவியலாளர்களுக்கு "ஊடகவியலாளர்" என்றும், பிராந்திய ஊடகவியலாளர்களுக்கு "பிராந்திய ஊடகவியலாளர்" என்றும் வேறுபட்ட ஊடக அடையாள அட்டைகள் வழங்கப்பட்டு வருகின்றன. 

இனிமேல், பிராந்திய ஊடகவியலாளர்களையும் கெளரவப்படுத்தும் நோக்கில், "பிராந்திய" என்ற சொல் நீக்கப்பட்டு, அவர்களுக்கும் "ஊடகவியலாளர்" என்ற சொல் மாத்திரம் பொறிக்கப்பட்டு பொதுவான, பாதுகாப்பான, கெளரவமான ஊடக அடையாள அட்டைகளை வழங்குவதற்கு, ஊடக அமைச்சு துரித நடவடிக்கை எடுத்துள்ளதாக, சட்டத்தரணி ஜகத் லியன ஆரச்சி தெரிவித்துள்ளார்.

பிரதேச மட்டத்தில் நாள் தோறும் செய்திகளைச் சேகரிப்பதற்காக, சமூகப் பணிகளை மாத்திரம் விசேட நோக்காகக் கொண்டு, மிகவும் அர்ப்பணிப்புடனும் துனிச்சலுடனும் செயற்படும், பத்திரிகை மற்றும் இலத்திரனியல் பிராந்திய ஊடகவியலாளர்களின் கெளரவத்தைப் பாதுகாக்கும் நோக்கில், இந்த சிறப்பு ஊடக அடையாள அட்டைகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் சட்டத்தரணி குறிப்பிட்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -