மர்ஹூம் அஷ்ரஃப் ஞாப­கார்த்த கிண்ண கிரிக்கெட் சுற்­றுப்போட்டி

பிறவ்ஸ்-
சாய்ந்தமருது டஸ்கஸ் விளையாட்டுக் கழகத்தின் 5ஆவது ஆண்டு நிறைவை முன்­னிட்­டு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபகத் தலைவர் மர்ஹூம் அஷ்ரஃப் ஞாப­கார்த்த கிண்ணம் மின்­னொளி கிரிக்கெட் சுற்­றுப்போட்டி சாய்ந்­த­ம­ருது கடற்­க­ரையில் பௌசி விளை­யாட்டு மைதா­னத்தில் நடைபெற்று வரு­கி­ற­து.

5 நாட்களாக நடைபெற்­று­க்கொண்­டி­ருக்­கும் இச்சுற்றுப் போட்டியில் கிழக்கு மாகாணத்திலுள்ள 72 அணிகள் பங்குபற்றுகின்றன. இந்­நி­லையில், நாளை வியா­ழக்­கி­ழமை (06) இறு­திச்­சுற்றுப் போட்டி நடை­பெ­ற­வுள்­ளது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தவிசாளரும் டஸ்கஸ் விளையாட்டுக் கழகத்தின் தலைவருமான ஏ.எல் அப்துல் மஜீட் தலைமையில் இடம்பெறும் இந்­நி­கழ்­வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரவூப் ஹக்கீம் பிரதம அதி­தி­யாக கலந்­து­கொள்­கி­றார்.

கெளரவ அதிதிகளாக விளையாட்டுத்துறை பிரதியமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ், சுகாதார பிரதியமைச்சர் பைசால் காசிம் ஆகி­யோரும் சிறப்பு அதி­தி­க­ளாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம். நசீர், மாகாண சபை உறுப்பினர்களான கே.எம்.ஏ. றஸாக், அரிப் சம்சுதீன், ஐ.எல்.எம். மாஹிர் ஆகியோர் கலந்துகொள்ளவுள்­ள­னர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -