பஸ்ஸிலிருந்து தவறி விழுந்த நடத்துனர் சிகிச்சை பயனின்றி மரணம்

ஏ.எச்.ஏ. ஹுஸைன்-

கா
த்தான்குடி - இலங்கைப் போக்குவரத்துச் சாலையில் கடமை புரியும் மூன்று பிள்ளைகளின் தந்தையான பஸ் நடத்துனர் செல்வநாயகம் சிவகுமார் (வயது 44) என்பவர் கடமையின்போது பஸ்ஸிலிருந்து தவறிக் கீழே வீதியில் விழுந்து படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் வெள்ளிக்கிழமை 30.06.2017 பிற்பகல் மரணித்து விட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது ளூ சம்பவ தினமான ஜுன் 20ஆம் திகதி காத்தான்குடி டிப்போவுக்குச் சொந்தமான பஸ் கொழும்புக்கும் மட்டக்களப்புக்கும் இடையில் அதன் வழமையான சேவையில் ஈடுபடுத்தப்பட்டது.

அன்றைய தினம் மேற்படி பஸ் வறக்காப்பொல எனுமிடத்தில் பயணித்துக் கொண்டிருக்கும்போது பஸ் நடத்துரான செல்வகுமார் திடீரென பஸ்ஸிலிருந்து தவறி கீழே வீதியில் விழுந்துள்ளார்.

தலையிலும் உடம்பிலுமாக படுகாயமடைந்த அவர் உடனடியாக வறக்காப்பொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கண்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் வெள்ளிக்கிழமை பிற்பகல் (30.06.2017) மரணித்துள்ளார்.

இச்சம்பவம் பற்றி வறக்காப்பொல போக்குவரத்துப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, வாழைச்சேனை - இலங்கைப் போக்குவரத்துச் சாலையில் கடமை புரிந்து வந்த பஸ் நடத்துனரான எச். முஹம்மது அன்வர் (வயது 35) என்பவர் கடமையின்போது பஸ்ஸிலிருந்து தவறிக் கீழே வீதியில் விழுந்து படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் மரணித்தது இங்கு குறிப்பிடத்தக்கது.

வாழைச்சேனை டிப்போவுக்குச் சொந்தமான பஸ் மட்டக்களப்பிலிருந்து பருத்தித்துறைக்கு அதன் வழமையான சேவையில் கடந்த 09.05.2017 அன்றும் கதுறுவெல நகருக்கூடாகச் சென்று கொண்டிருக்கும்போது பஸ் நடத்துரான அன்வர் திடீரென பஸ்ஸிலிருந்து தவறி கீழே வீதியில் விழுந்துள்ளார்.

தலையிலும் உடம்பிலுமாக படுகாயமடைந்த அவர் உடனடியாக பொலொன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் (18.05.2017) மரணித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -