மட்டக்களப்பு தேரரின் மெய்ப் பாதுகாவரான பொலிஸ் உத்தியோக்கத்தர் இடைநிறுத்தம்;



ஏ.எச்.ஏ. ஹுஸைன் -

ட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்னவுக்கு மெய்ப்பாதுகாவலராகக் கடமை புரிந்து வந்த பொலிஸ் உத்தியோகத்தர் பணி இடை நிறுத்தம் செய்யப்பட்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் தேரரைத்; தாக்கியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே சனிக்கிழமை முதல் 08.07.2017 பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு மங்களராமய விஹாராதிபதி அம்பிட்டிய சுமணரத்தின தேரரின்; மெய்ப்பாதுகாவலரான மேற்படி பொலிஸ் உத்தியோகத்தருக்கும் தேரருக்கும் இடையில் அம்பாறையிலுள்ள மங்களகம விஹாரையில் வைத்து கடந்த வெள்ளிக்கிழமை (07.07.2017) வாய்த்தர்க்கம் ஏற்பட்டதாகவும் இதனைத் தொடர்ந்து பொலிஸ் உத்தியோகத்தர் தன்னைத் தாக்கியதாகவும் தேரர் அம்பாறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.


இச்சம்பவம்பற்றி விசாரணை மேற்கொண்டுவந்த பொலிஸார், தேரரின் மெய்ப்பாதுகாவலராக இருந்து வந்த பொலிஸ் உத்தியோகத்தரை பணி இடைநிறுத்தம் செய்துள்ளனர்.

மட்டக்களப்பு தேரர் அடிக்கடி பொலிஸாருடன் முரண்பட்டுக் கொள்பவர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

கடந்த மாதமும் மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் ஒரு பொலிஸாருடனும் அவர் முரண்பட்டிருந்தார்.

இதற்கு முன்னரும் ஆர்ப்பாட்டங்கள், ஊர்வலங்கள், எதிர்ப்புக்கள் நடத்தும்போது கடமையிலுள்ள பொலிஸாருடன் அவர் பல தடவைகளில் முரண்பட்டிருக்கிறார் என்று நோக்காளர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -