ஒலுவில் பாடசாலைக்கு வாசிகசாலையை அமைத்துக்கொடுக்கும் இளைஞர் அமைப்பு

ஏ.ஆர்.எம். நெளசாத், றிஸ்லி சம்சாட்- 

அட்டாளைச்சேனை, ஒலுவில்  அல் / அஷ்ஹர் வித்தியாலயத்தின் ஆரம்பகாலம் தொடக்கம் இன்று வரை சுமார் 56 வருடமாக நீண்ட கால தேவையாக இருந்துவந்த ஆரம்பப்பிரிவு மாணவர்களுக்கான நிரந்தரமான வாசிகசாலை ஒன்றினை அமைப்பதற்கான வேலைத்திட்டத்தினை அந்-நூர் இளைஞர் கழகம் மற்றும் தேசிய இளைஞர் மன்றம் , பொதுமக்கள் ஆகியோர்களின் பங்களிப்புக்களுடன் இன்று (19) அதற்கான முதற்கட்ட வேலைத்திட்டத்திற்கான அடிக்கல் நடும் நிகழ்வு ஒலுவில் அந்-நூர் இளைஞர் கழகத் தலைவவரும், அறிவிப்பாளருமான எஸ்.சியான் தலைமையில் இடம்பெற்றது .

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக முன்னாள் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் உதவித்தவிசாளரும்,  சீகாஸ் அமைப்பின் தலைவருமான அல் - ஹாஜ் ஏ.எல் அமானுள்ளா, பாடசாலையின் அதிபர் SMBM. அறூஸ் அட்டாளைச்சேனை பிரதேச செயலக இளைஞர் சேவை அதிகாரி MTM.ஹாருன், பொருளாதார அபிவிருத்தி உத்தியேகத்தர் SL.றம்ஸான் , கிராம உத்தியேகத்தர் AL.அஷ்ரப் , கிராம நலன்புரிச்சங்கத்தலைவர் சபீயுள்ளா , அந் நூர்-பள்ளிவாயல் தலைவர் AL.இல்லியாஸ் மற்றும் அன்-நூர் இளைஞர் கழக நிர்வாகத்தினர் ஊர் பிரமுகா்கள்,பாடசாலை நிர்வாகத்தினர் மாணவர்கள் ஆகியோர்  கலந்து சிறப்பித்தனர்.

மேலும், இந்நிகழ்வில் மெளலவி ஜப்ரியினால் துஆ பிராத்தனையும் இடம்பெற்றது. 







இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -