ஏ.ஆர்.எம். நெளசாத், றிஸ்லி சம்சாட்-
அட்டாளைச்சேனை, ஒலுவில் அல் / அஷ்ஹர் வித்தியாலயத்தின் ஆரம்பகாலம் தொடக்கம் இன்று வரை சுமார் 56 வருடமாக நீண்ட கால தேவையாக இருந்துவந்த ஆரம்பப்பிரிவு மாணவர்களுக்கான நிரந்தரமான வாசிகசாலை ஒன்றினை அமைப்பதற்கான வேலைத்திட்டத்தினை அந்-நூர் இளைஞர் கழகம் மற்றும் தேசிய இளைஞர் மன்றம் , பொதுமக்கள் ஆகியோர்களின் பங்களிப்புக்களுடன் இன்று (19) அதற்கான முதற்கட்ட வேலைத்திட்டத்திற்கான அடிக்கல் நடும் நிகழ்வு ஒலுவில் அந்-நூர் இளைஞர் கழகத் தலைவவரும், அறிவிப்பாளருமான எஸ்.சியான் தலைமையில் இடம்பெற்றது .
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக முன்னாள் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் உதவித்தவிசாளரும், சீகாஸ் அமைப்பின் தலைவருமான அல் - ஹாஜ் ஏ.எல் அமானுள்ளா, பாடசாலையின் அதிபர் SMBM. அறூஸ் அட்டாளைச்சேனை பிரதேச செயலக இளைஞர் சேவை அதிகாரி MTM.ஹாருன், பொருளாதார அபிவிருத்தி உத்தியேகத்தர் SL.றம்ஸான் , கிராம உத்தியேகத்தர் AL.அஷ்ரப் , கிராம நலன்புரிச்சங்கத்தலைவர் சபீயுள்ளா , அந் நூர்-பள்ளிவாயல் தலைவர் AL.இல்லியாஸ் மற்றும் அன்-நூர் இளைஞர் கழக நிர்வாகத்தினர் ஊர் பிரமுகா்கள்,பாடசாலை நிர்வாகத்தினர் மாணவர்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.