அரபிக்கல்லூரி மாணவர்கள் இருவர் நீரில் மூழ்கி மரணம்..!

அப்துல்சலாம் யாசீம்-
குருநாகல்- கெக்குனுகொல்ல அரக்கியால ரவ்லத்துல் ஹாபிழீன் அரபிக்கல்லூரி மாணவர்கள் இருவர் மாவிலாறு குளத்தில் தோணியிலிருந்து தவறி விழுந்து நீரில் மூழ்கி இன்று (15) உயிரிழந்துள்ளதாக சேறுநுவர பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு உயிரிழந்தவர்கள் கெக்குனுகொல்ல-அரக்கியால பகுதியைச்சேர்ந்த எம்.என்.எம்.அப்துல்லாஹ் (11வயது) மற்றும் எம்.எச்.எம்.அப்துல்லாஹ் (18வயது) ஆகியோர் எனவும் தெரியவருகின்றது.

குறித்த அரபிக்கல்லூரி மாணவர்கள் மூதூரில் திருமண வீடொன்றிற்கு வருகை தந்த போது மாவிலாறு குளத்தை பார்வையிட சென்ற வேளை தோணியில் பயணித்ததாகவும் அதனையடுத்து தோணி கவிழ்ந்ததாகவும் ஆரம்பகட்ட விசாரணையின் போது தெரியவருகின்றது.

உயிரிழந்த இரண்டு மாணவர்களின் சடலங்களும் சேறுநுவர பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்ட்டுள்ளது. விசாரணைகளை சேறுறுவர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -