கிழக்கு மாகாண ஹாபிழ்களுக்கான அல்குர்ஆன் மனன இறுதிப் போட்டி சனிக்கிழமை

ஏ.எச்.ஏ. ஹுஸைன்-

ஹாபிழ்கள் மன்றம் நடாத்தும் கிழக்கு மாகாண ஹாபிழ்களுக்கான அல்குர்ஆன் மனனப் போட்டிகளின் இறுதிப் போட்டி நிகழ்வு எதிர்வரும் 15.07.2017 சனிக்கிழமை காலை 7.30 மணிக்கு ஓட்டமாவடி பிரதேச சபை மண்டபத்தில் நடைபெறவுளள்து என அம்மன்றம் தெரிவித்துள்ளது.

கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட்டின் முயற்சியால் உருவாக்கப்பட்ட ஹாபிழ்கள் மன்றத்தினால், கிழக்குமாகாண ஹாபிழ்கள் மற்றும் ஹாபிழாக்களுக்கான மாவட்ட மட்டத்திலான அல்குர்ஆன் மனனப் போட்டிகள் கிழக்கின் மூன்று மாவட்டங்களிலும் நடைபெற்று முடிந்திருக்கின்றன.

இந்நிலையிலேயே இதற்கான இறுதிப்போட்டிகள் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் இறுதிக் கட்டத்தினை எட்டியிருக்கின்றன.

மேலும் இந்த இறுதிப் போட்டி நிகழ்வில் வெற்றிபெறும் வெற்றியாளர்களுக்கான பரிசில்கள் செப்ரெம்பெர் மாதம் ஹாபிழ்கள் மன்றத்தினால் ஏறாவூரில் பிரம்மாண்டமாக நடாத்தப்படவிருக்கும் ஹாபிழ்கள் மாநாட்டின்போது வழங்கிவைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்த நிகழ்வு இடம்பெறும்போது கூடவே, ஏறாவூர் குல்லிய்யத்து தாரில் உலூம் அரபுக்கல்லூரி பழைய மாணவர்களுக்கான பட்டமளிப்பும், கௌரவிப்பும் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -