விபத்திலிருந்து மற்றொரு இளைஞனைக் காப்பதற்காக முயற்சித்த இளைஞன் விபத்தில் பலி

ஏ.எச்.ஏ. ஹுஸைன்-

ட்டமாவடி பிரதான வீதியில் வெள்ளிக்கிழமை பிற்பகல் 21.07.2017 இடம்பெற்ற வீதி விபத்தொன்றில் சிக்கி இளைஞர் ஒருவர் படுகாயமடைந்த பின் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

ஓட்டமாவடியைச் சேர்ந்த சுலைமாலெப்பை ஜனூஸ் (வயது 25) என்பவரே படுகாமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பயனின்றி சனிக்கிழமை காலை உயிரிழந்துள்ளார்.

இவர் முச்சக்கரவண்டியில் பயணித்துக் கொண்டிருக்கும்போது வீதி ஒழுங்குக்கு மாற்றமாக மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த மற்றொரு இளைஞனை விபத்திலிருந்து காப்பதற்காக இவர் ஒதுங்கியுள்ளார்.

அவ்வேளையில் இவர் செலுத்திச் சென்ற முச்சக்கரவண்டி பஸ் ஒன்றுடன் மோதியதில் விபத்து சம்பவித்து படுகாயமடைந்தார்.

எனினும், தவறாக மோட்டார் சைக்கிளைச் செலுத்தி வந்து விபத்தை ஏற்படுத்திய இளைஞன் எதுவித காயங்களுமின்றித் தப்பிச் சென்றுள்ளான்.

இச்சம்பவம்பற்றி வாழைச்சேனைப் பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -