ஏறாவூரில் 40 இலட்ச ரூபா செலவில் இரண்டு வீதிகள் கொங்கிறீட் வீதிகயாக அபிவிருத்தி..!

றாவூரின் மிச் நகர் பிரதான வீதி மற்றும் மிச் நகர் வடிகான் வீதி ஆகியவற்றை கொங்கிறீட் வீதிகளாக நிர்மாணிப்பதற்கு கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்டின் நிதியொதுக்கீட்டிற்கமைய 40 இலட்சம் ரூபா செலவில் அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று முன்தினம் மாலை (26.08.2017) இடம்பெற்றது. இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்,கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஷிப்லி பாறூக் மற்றும் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அரசியல் பிரதிநிதிகள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

ஏறாவூர் மிச் நகர் பகுதி அபிவிருத்திச் செயற்பாடுகளில் புறக்கணிக்கப்பட்டு வந்த நிலையில் அண்மைக்காலமாக கிழக்கு முதலமைச்சரின் முயற்சியால் வடிகான் கட்டமைப்பு,வீதிப் புனரமைப்பு என பல்வேறு அபிவிருத்தி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு அங்கமாகவே மிச் நகர் பிரதான வீதி மற்றும் வடிகான் வீதி ஆகியவற்றுக்கு கொங்கிறீட் இடும் நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.



எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -