மண்டைதீவில் படகு விபத்து – 6 மாணவர்கள் உயிரிழப்பு

பாறுக் ஷிஹான்-
யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மண்டதீவு கடற் பகுதியில் இடம்பெற்ற படகு விபத்தில் 6 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் நேற்று (28) மாலை 2 மணியளவில் மண்டை தீவு சிறுத்தீவு பகுதி கடற்பரப்பில் இடம்பெற்றுள்ளது. இப்பகுதியில் உள்ள படகு தரிப்பிடம் ஒன்றில் இருந்து படகை எடுத்து சென்ற 7 மாணவர்களே இவ்வனர்த்தத்திற்கு உள்ளாகினர். அவர்களில் ஐவர் நீரில் மூழ்கிய உயிரிழந்துள்ள நிலையில் ஒருவர் நீந்திக் கரை சேர்ந்துள்ளார்.மற்றுமொருவரரைக் காணவில்லை.பின்னர் அவரும் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மேலும் இதன் போது நீந்திக் கரை சேர்ந்தவர் உட்பட நான்கு பேர் தற்போது பொலிஸரால் கைது செய்யப்பட்டுளனர். உயிரிழந்தவர்களின் உடல்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளன. உயிரிழந்த மாணவர்கள் உரும்பிராய் நல்லூர் சண்டிலிப்பாய் கொக்குவில் பிரதேசங்களை சேர்ந்தவர்களாவர்.

மேலும் யாழ் தொழில் நுட்பக்கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் உட்பட 16மாணவர்கள் நண்பரின் பிறந்த நாளை ஒட்டி பொழுதுபோக்கிற்காக கடலுக்கு சென்ற போது இவ் அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸ் விசாரணையில் இருந்து தெரிய வந்துள்ளது.

இதே வேளை சுமார் ஐந்து தினங்களுக்கு முன்னர் இத்தீவுக்கு எதிர்ப்பக்கமாகவுள்ள குருசடித்தீவு தேவாலயத்திற்கு நாவாந்துறையிலிருந்து படகில் சென்ற குடும்பமொன்றும் ஆபத்தில் சிக்கியிருந்ததோடு ஒருவர் உயிரிழந்திருந்தார் . இக்கடற்பகுதி ஆழ்கடல் இல்லாவிடினும் தற்போதைய காலநிலை காரணமாக விபத்துக்கள் ஏற்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -