கண்டியில் இந்திய கிரிக்கெட் வீரர்கள் மூவர்ண கொடி ஏற்றி சுதந்திர தினத்தை கொண்டாடினர். இலங்கை வந்துள்ள இந்திய அணி வீரர்கள் கண்டியில் தங்கியுள்ளனர். இரு அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி வரும் 20ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
இந்நிலையில் இந்தியா, இன்று தனது 71ஆவது சுதந்திர தினத்தை கோலாகலமாக கொண்டிவருகிறது. இலங்கையில் உள்ள இந்திய கிரிக்கெட் வீரர்கள், மூவர்ண கொடி ஏற்றி சுதந்திரதினத்தை சிறப்பாக கொண்டாடினர்.
இந்திய அணித்தலைவர் கோலி கொடி ஏற்ற, பின் அனைத்து வீரர்களும் மரியாதை செலுத்தினர். இதை பிசிசிஐ., தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.