இலஞ்சம் பெற்ற பொலிஸ் சார்ஜன் கைது

அப்துல்சலாம் யாசீம்-

ஹொரவ்பொத்தானை பொலிஸ் நிலையத்தில் சிறு குற்றத்தடுப்புப் பிரிவில் கடமையாற்றி வந்த பொலிஸ் சார்ஜன் உபாலி ரத்னாயக்க என்பவர் இன்று (02) காலை இலஞ்ச ஊழல்கள் ஆணைக்குழுவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

மரம் வெட்டும் இயந்திரமொன்றை பொலிஸார் கைப்பற்றிய நிலையில் அதனை உரியவரிடம் பெற்றுத்தருவதாகக் கூறி 10,000 ரூபாயை இலஞ்சமாகப் பெறும் வேளையில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினரால் இவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் குறித்து தெரியவருவதாவது- சட்டவிரோதமான முறையில் மரங்களை வெட்டிய போது சேன்சோயா இயந்திரமொன்றினை கைப்பற்றிய பொலிஸ் சார்ஜன் நீதிமன்றில் வழக்கு தாக்காமல் இயந்திர உரிமையாளரிடம் இலஞ்சமாக பத்தாயிரம் ரூபாயினை இலஞ்சமாக கேட்டதாகவும் இனிவரும் காலங்களில்
முதிரை மரக்குற்றிகளை வெட்டுவதற்கு அனுமதி வழங்குவதாகவும் தெரிவித்து 10000/=ரூபாயினை இலஞ்சமாக கேட்டதாக இலஞ்ச ஊழல்கள் ஆணைக்குழுவில் பாதிக்கப்பட்டவர் முறைப்பாடொன்றினை செய்ததாகவும் இலஞ்ச ஊழல்கள் ஆணைக்குழுவின் உயரதிகாரியொருவர் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட பொலிஸ் சார்ஜனான உபாலி ரத்னாயக்காவை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -