பிணை எடுக்க நீதி மன்றம் வரை சென்றவர் தற்போது ஜப்பானில்..!

அ.அஹமட்-
னாதிபதி மைதிரிபாலவின் வெற்றிக்காக உழைத்தவரும் ஞானசார தேரருக்கு பிணை பெற்றுக்கொடுக்க நீதி மன்றம்வரை சென்றவருமான வலப்பனை சுனங்கள தேரர் ஞானசார தேரருடன் ஜப்பான் சென்றுள்ளமையானது ஞானசாரதேரரின் பின்னால் இந்த நல்லாட்சியே இருப்பதாக நாம் இவ்வளவு காலம் கூறிவந்தது மேலும் நிரூபனமாகியுள்ளது.

நான்கு பொலிஸ் குழுக்களால் தேடப்படு வந்த ஞானசார தேரருக்கு மூன்று வழக்குகளில் இரண்டு மணி நேரங்களுக்குள்பிணை வழங்கப்பட்டது இது இலங்கை நீதித்துறை வரலாற்றில் ஒரு சாதனையாகும்.

ஞானசார தேரரை பாதுகாத்த பின்னணியில் ஜனாதிபதி இருந்ததாக நாம் கூற முன்னர் அஸாத் சாலியேகூறியிருந்தார்.அதனை உறுதிப்படுத்தும் வகையில் ஜனாதிபதி மைதிரிபாலவின் வெற்றிக்காக உழைத்தவரும் அவரதுஅலோசகருமான வலப்பனை சுனங்கள தேரர் ஞானசார தேரருக்கு பிணை பெற்றுக்கொடுக்க நீதி மன்றம் வரை சென்றார்.

அதே தேரர் இன்று நீதிமன்றத்திற்கு அறிவிக்காமல் ஜப்பான் சென்றுள்ள ஞானசார தேரருடன் ஜப்பான்சென்றுள்ளமையானது நாம் இவ்வளவு காலம் கூறிவந்த விடயங்களை சந்தேகத்திற்கு இடமில்லாமல் நிரூபித்துள்ளது.

நல்லாட்சியாளர்கள் 2012 இல் திட்டமிட்ட ஆட்சி கவிழ்பு சதிதிட்டத்தில் ஒரு அங்கமாக பொதுபல சேனா இருந்துள்ளதுஎன்பதையும் ஒருபுறம் அவர்களை மஹிந்த குடும்பத்துடன் ஒட்டி உறவாட செய்துவிட்டு மறுபுறம் அவர்களை கொண்டுமுஸ்லிம்களை தாக்கியதும் திட்டமிடப்பட்ட சதி என்பதையும் தற்போது ஞானசார தேரரை காப்பாற்ற இவ்வரசு எடுக்கும்முயற்சிகள் மூலம் எமக்கு உறுதிப்படுத்தியுள்ளது.

கூட்டு எதிரணினர் வெளி நாடு செல்ல ஆயிரம் முறை நீதிமன்றம் ஏறி இறங்க வேண்டிய சூழ்நிலையில் ஞானசார தேரர்எதுவித அனுமதியும் இன்றி ஜப்பான் சென்றுள்ளமை தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி கூட தனது அதிருப்தியைவெளியிட்டிருந்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -