பாதுகாப்புக்காக இந்தியாவிடமிருந்து கப்பல்களை வாங்கும் இலங்கை..!

ந்தியாவில் இருந்து கடற்பாதுகாப்புக்காக கப்பல்களை வாங்குவதற்கு திட்டமிட்டுள்ளதாக இலங்கை கடற்படை வைஸ் அட்மிரல் டிரவிஸ் சின்னையா தெரிவித்துள்ளார் என இந்திய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இதன்மூலம் இலங்கை, இந்தியா கடற்பரப்பில் நடைபெறும் கடத்தல் உள்ளிட்ட குற்றச் செயல்களை, ஒரு வருடத்திற்குள் நிரூபித்து காண்பிக்க முடியம் என்றும் எதிர்வரும் செப்டம்பர் மாதத்தில் ஒரு கப்பலும், அடுத்த ஆண்டு மூன்று கப்பல்களும் இலங்கைக்கு தரப்பட உள்ளதாக வைஸ் அட்மிரல் டிரவிஸ் சின்னையா தெரிவித்துள்ளார்.

இந்திய மீனவர்களின் அத்துமீறல்களை தடுக்க இன்று முதல் கடல் எல்லைத் திட்டங்களை மாற்றியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார் என குறித்த ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -