மொறவெவ பிரதேச சபை கடை தீப்பற்றியது

அப்துல்சலாம் யாசீம்-

திருகோணமலை-மொறவெவ பிரதேச சபைக்கு சொந்தமான கட்டிடத்தில் இயங்கி வந்த சில்லறைக்கடையொன்று இன்று அதிகாலை (16) 1-15 மணியளவில் தீப்பற்றியுள்ளதாக மொறவெவ பொலிஸார் தெரிவித்தனர்.

மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலைக்கு முன்னாலுள்ள சில்லறை கடை தீப்பற்றி எரிவதாக மொறவெவ பொலிஸ் நிலையத்திற்கு வழங்கப்பட்ட தகவலையடுத்து அங்கு விரைந்த பொலிஸார் பொதுமக்களின் உதவியுடன் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

தீப்பற்றியமைக்கான காரணம் இன்னும் கண்டு பிடிக்கப்படவில்லையெனவும் சீன வெடி மற்றும் தீப்பெட்டி அருகருகே அவ்விடத்தில் வைக்கப்பட்டிருந்ததாகவும் ஆரம்பகட்ட விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.

மேலதிக விசாரணைகளை மொறவெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -