குற்றப்புலனாய்வுப் பிரிவுக்கு முன்னால் ஆர்ப்பாட்டம் – படையினர் குவிப்பு

ல்லாட்சி அரசுக்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று தற்போது குற்றப்புலனாய்வுப் பிரிவுக்கு முன்னால் நடைபெற்று வருகிறது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷ வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காகக் குற்றப்புலனாய்வு பிரிவில் முன்னிலையாகியுள்ள நிலையில் இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்று வருகிறது.

“எமக்கு மஹிந்தவின் அரசாங்கம் வேண்டும்” எமக்கு எமது தாய் மீண்டும் வேண்டும்” போன்ற கோஷங்களை எழுப்பியவண்ணம் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கூட்டு எதிர்கட்சின் பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட பலர் குற்றப்புலனாய்வுப் பிரிவுக்கு முன்னாள் ஒன்றுகூடியுள்ளனர். அதேவேளை, கலகம் அடக்கும் படையினரும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். மேலும் பிரதேசத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.



எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -