முச்சக்கரவண்டியின் மீது மரம் வீழ்ந்தில் பெண் ஒருவர் ஸ்தலத்திலேயே பலி - போக்குவரத்து பாதிப்பு

க.கிஷாந்தன், இராமச்சந்திரன்-
லவாக்கலை பொலிஸ் பிரிவிரிற்குட்பட்ட அட்டன் தலவாக்கலை பிரதான வீதியில் டெவோன் பகுதியில் ஏற்பட்ட விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர். இவ்விபத்து 29.08.2017 அன்று மதியம் 12 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

கொட்டகலை பகுதியிலிருந்து தலவாக்கலை பகுதிக்கு சென்ற முச்சக்கரவண்டியே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்தில் பெண் ஒருவர் ஸ்தலத்திலேயே பலியானதோடு, சாரதி படுங்காயங்களுக்குள்ளாகியுள்ளார். முச்சக்கரவண்டியில் சாரதியும் பெண் ஒருவருமே பயணித்துள்ளனர். பயணஞ் செல்லும் வழியில் டெவோன் பகுதியில் தீடிரென பாரிய மரம் ஒன்று முறிந்து முச்சக்கரவண்டியின் மேல் விழுந்து விபத்துக்குள்ளாகியதிலேயே இவ்வனர்த்தம் இடம்பெற்றுள்ளது.

மரம் முறிந்து விழுந்ததன் காரணமாக பிரதான வீதியினூடான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதோடு, போக்குவரத்தை சீர்செய்வதற்கான நடவடிக்கையை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். இவ்வாறு உயிரிழந்தவர் தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலயத்தில் கற்பித்துக் கொடுக்கும் ஆசிரியையான வெரோனிக்கா (வயது -39) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

உயிரிழந்த பெண்ணின் சடலம் லிந்துலை வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதோடு, காயமடைந்த சாரதி லிந்துலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். இவ்விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை தலவாக்கலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.




எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -