பள்ளிவாசல்கள் மீது தாக்குதல் மீண்டும் ஆரம்பம்..!

குருநாகல் பெந்தெனிகொட பகுதியிலுள்ள ஜும்மா பள்ளிவாசல் மற்றும் அதே பகுதியிலுள்ள தைக்கா பள்ளிவாசல் மீதும் நேற்று நள்ளிரவு இனந்தெரியாதோரால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முன்னாள் நீதி, புத்தசாசன அமைச்சர் நேற்றைய தினம் பதவி விலகிய பின்னர் இடம்பெற்ற முதலாவது இனவாத தாக்குதல் இதுவாகும்.

பெந்தெனிகொட மஸ்ஜுதுத் தக்வா ஜும்மா பள்ளிவாசல் மற்றும் உஸ்வத்துல் ஹஸனா பள்ளிவாசல் ஆகிய இரண்டு பள்ளிவாசல்கள் மீதே தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பள்ளிவாசல்களின் கண்ணாடிகள் மீது கற்கள் வீசப்பட்டுள்ளதுடன் பள்ளிவாசல் நுழைவாயிலில் சிறுநீரும் கழிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -