வாக்குமூலம் வழங்க ஒரு மாத காலஅவகாசத்தை தருமாறு கோரும் மஹிந்தவின் மனைவி

செஞ்சிலுவைச் சங்கம் சிரிலிய சவிய அமைப்புக்கு பெற்றுக்கொடுத்த டிபென்டர் வாகனத்தை யோஷித்த ராஜபக்சவின் பாவனைக்கு வழங்கியமை சம்பந்தமாக வாக்குமூலம் ஒன்றை வழங்க தனக்கு ஒரு மாத காலஅவகாசத்தை தருமாறு முன்னாள் ஜனாதிபதியின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ச, குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த மாதம் 27 ஆம் திகதி குற்றப் புலனாய்வு திணைக்களம் ஷிரந்தி ராஜபக்சவை விசாரணைக்கு அழைத்திருந்தது. எனினும் தன்னால் அன்றைய தினம் ஆஜராக முடியாது என ஷிரந்தி ராஜபக்ச தனது சட்டத்தரணி ஊடாக அறிவித்திருந்தார்.

இந்த நிலையில், வாக்குமூலத்திற்கான ஆவணங்கள் தயாரிக்கும் தேவை இருப்பதால், வாக்குமூலம் வழங்க ஒரு மாத கால அவகாசம் தருமாறு ஷிரந்தி ராஜபக்ச கோரிக்கை விடுத்துள்ளார்.

வசீம் தாஜூடீன் கொலை சம்பந்தமாக நடத்தப்பட்டு வரும் விசாரணைகளில் சிரிலிய சவிய அமைப்புக்கு சொந்தமான டிபென்டர் வாகம் கண்டுபிடிக்கப்பட்டது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -