புங்குடுதீவு "தாயகம்" நூலகத்துக்கு, புத்தகங்கள் அன்பளிப்பு செய்த சுவிஸ் "சுதா,செல்வி" தம்பதிகள்...படங்கள் இணைப்பு



புங்குடுதீவு "தாயகம் சமூக சேவை அகம்" அமைப்பினால் ஆரம்பிக்கப்பட்ட புங்குடுதீவு 12 இல் அமைந்துள்ள "தாயகம் பொது நூலகத்துக்கு" விரும்பியோர் "புத்தகங்கள் அன்பளிப்பு" செய்யலாமென நாம் ஏற்கனவே அறிவித்து இருந்தோம்.

இதன் பிரகாரம், புங்குடுதீவில் அமைந்துள்ள "தாயகம் பொது நூலகத்துக்கு" சுவிஸில் இருந்து விடுமுறைக்காக, இலங்கை சென்று இருந்த திரு. திருமதி சுதா செல்வி குடும்பத்தினர், சிறிதளவு நூல்களை இங்கிருந்து கொண்டு சென்று அன்பளிப்பு செய்து உள்ளனர்.

மேற்படி நூல்களை, புங்குடுதீவு "தாயகம் சமூக சேவை அகம்" அமைப்பின் தலைவியான திருமதி.சுலோசனாம்பிகை தனபாலன் அவர்கள் இன்றையதினம் பெற்றுக் கொண்டார்.

"ஏரும், எழுத்தும்.. பாரை உயர்த்தும்"..!!

இவ்வண்ணம்...
செல்வி.ஜெகநந்தினி முத்துக்குமாரு,
செயலாளர்,
"தாயகம் சமூக சேவையகம்" புங்குடுதீவு.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -