நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமச்சந்திரன்-
மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்கந்த தோட்டத்தில் வீடிற்கருகில் நிறுத்திருந்தபோது காணாமல் போன முச்சக்கரவண்டி பலாங்கொட பிரதேசத்திலிருந்து மீட்கப்பட்டுள்ளதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர். பலாங்கொடை கல்தொட்ட பிரதேசத்திலிருந்து 22.08.2017 மாலை முச்சக்கரவண்டியை மீட்டதுடன் கடத்தல் சம்பவத்துக்கு பயன் படுத்தப்பட்ட மற்றொரு முச்சக்கரவண்டியையும் சம்பவத்துடன் தொடர்புடைய மூவரையும் கைது செய்துள்ளனர்.
கடந்த 18 ம் திகதி தனது வீட்டிற்கருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டி காணாமல் போயுள்ளதாக மஸ்கெலியா பொலிஸாருக்கு கிடைத்த முறைபாட்டையடுத்து பொலிஸார் தேடுதல் நடவடிக்கையில் ஈடுட்ட நிலையிலே காணாமல் போன முச்சக்கரவண்டி இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது. கடத்தல் சம்பவத்தின் பிரதான சந்தேக நபரினால் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் குறித்த முச்சக்கரவண்டி மஸ்கெலியா கல்கந்த தோட்டதை தேர்ந்த நபரிற்கு விற்பனை செய்யப்பட்டுளள்ளமை விசாரணையின் மூலம் தெ ரியவந்துள்ளது.
தொடர்ச்சியாக இவ்வாறு முச்சக்கரவண்டிகளை விற்பனை செய்வதும் மீண்டும் கொள்ளையடித்து வேறு நபர்களுக்கு விற்பனை செய்யும் நடவடிக்கையில் ஈடுபடுபவர் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். கைது செய்ப்பட்ட சந்தேக நபர்களை 23.08.2017 அட்டன் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர்.