ரவிக்கு ஏற்பட்ட ஞாபக மறதி நோய் ராஜிதவுக்கு ஏற்பட்டுள்ளதாக ஹம்பந்தோட்டை பாராளுமன்ற நாமல் ராஜபக்ஷ குறிப்பிட்டார். ஹம்பாந்தோட்டையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றும் போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்;
இவ்வரசினர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த அணியினரை ஊழல்வாதிகள் என கூறி அரசியல் செய்தவதவர்கள் இன்றுஅவர்களது ஊழல்கள் வெளியே வரும் போது விழி பிதுங்கி நிற்கின்றார்கள். அந்த வகையில் ராஜித சேனாரத்னவின் ஊழல் தொடர்பில் நாம் இப்பொது பேச ஆரம்பித்துள்ளது முதல் அவர் கலவரம். அடைந்துள்ளார்.குற்றவாளிகளின் ஒரு சில வார்த்தைகளை வைத்து அவர்கள் குற்றம் செய்துள்ளார்களா என்பதைஅறிந்துகொள்ளலாம்.
ஊழல்கள் தொடர்பில் ஊடகவியலாளர்கள் வினா எழுப்பிய போது " அது தனக்கு மறந்துவிட்டதாக " தெரிவித்துள்ளார்கள். இந்த மழுப்பல் பதிலே குறித்த விடயத்திலிருந்து தப்பிக்க முயலும் பதிலாக நோக்கலாம்.இது போன்றேமுன்னாள்அமைச்சர் ரவி கருநாணாயக்கவும் தனது ஊழல் விடயத்தில் மாட்டிக்கொண்ட போது கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது. நல்லாட்சி அரசானது யாராவது ஊழலில் மாட்டிக்கொண்டால் இப்படி கூற வேண்டுமென பயிற்சி வழங்கியுள்ளதா என்றஅச்சம் எழுகிறது.
ஒருவரிடம் தனது அமைச்சு காலத்தில் இடம்பெற்ற செயல்கள் தொடர்பில் யாராவது வினா எழுப்பினால், அது தொடர்பில்குறித்த அமைச்சர் விளக்கமளிக்க கடமைப்பட்டவர். அமைச்சர் ராஜிதவின் இப் பதிலானது அவரின் பொறுப்பற்றதன்மையை எடுத்துகாட்டுகிறது. இப்படியானவர் இன்றைய அமைச்சரவையின் ஊடகப் பேச்சாளராக உள்ளமையானதுதற்போதைய அமைச்சரவையின் தரத்தை அறிந்துகொள்ளச் செய்கிறது என குறிப்பிட்டார்.
