வாக்குறுதியளித்தபடி குடிநீர் வழங்கி வைத்த முதலமைச்சர் - மக்கள் நன்றி தெரிவிப்பு

றாவூர் ஹிதாயத் நகரில் குடிநீரைப் பெற்றுக் கொள்வதில் சிரமங்களை எதிர்கொண்டு வந்த 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினருக்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் குடிநீர் வசதிகளை பெற்றுக் கொடுத்தார், இதற்கு முன்னர் மக்களின் குறையறியும் நோக்கில் ஹிதாயத் நகருக்கு சென்றிருந்த போது அந்த மக்கள் தமது குடிநீர்ப்பிரச்சினைகள் தொடர்பில் கிழக்கு மாகாண முதலமைச்சரிடம் முறையிட்டிருந்தனர்.

இதற்கமைவாக ஜமிய்யதுல் ஹஸனாத் சமூக சேவை அமைப்புடன் இணைந்து மக்களுக்கான குடிநீர் வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும் நடவடிக்கைகயினை கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் நேற்று (13) ஆம் திகதி முன்னெடுத்தார், தமக்கு வாக்குறுதியளித்தபடி குடிநீர் வசதிகளை வழங்கி வைத்த கிழக்கு முதலமைச்சருக்கு மக்கள் தமது நன்றிகளை தெரிவித்துக் கொண்டனர்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -