சர்வதேச இளைஞர் தினம் அனுஷ்டிப்பு!

தேசிய கொள்கைகள் மற்றும், பொருளாதார நடவடிக்கைகள் அமைச்சும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றமும் இணைந்து சர்வதேச இளைஞர் தினத்தை நேற்றைய தினம் (சனிக்கிழமை) 12/08/2017 அன்று கொழும்பு நகரத்தில் நடாத்தியிருந்தது. போதைவஸ்த்தை ஒழிப்போம் எனும் தொனிப்பொருளில் நாடளாவிய ரீதியில் இருந்து வருகை தந்த இளைஞர்கள், யுவதிகளால் விழிப்புணர்வு பேரணி சுதந்திர சதுக்கத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்டு கொழும்பு பொலிஸ் பார்க் மைதானத்தில் நிறைவுசெய்யப்பட்டு தொடர்ந்து கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.

இந் நிகழ்விற்கு சட்டம் ஒழுங்கு மற்றும் தென்­மா­காண அபி­வி­ருத்தி அமைச்சர் சாகல ரட்­நா­யக்க, பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, தேசிய இளைஞர் சேவைகள் மன்ற பணிப்பாளர் நாயகம் சட்டத்தரணி எறந்த வெலியங்கே , தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார நடவடிக்கைகள் அமைச்சின் மேலதிக செயலாளர் கலாநிதி கீரகள, தேசிய இளைஞர் சேவைகள் மன்ற பணிப்பாளர்கள், இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர்கள், இளைஞர் யுவதிகள் என பலர் கலந்து கொண்டனர்.




எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -